உழைக்கச் சாப்பிட்டாத்தான்
சோறு உடம்பில் சேரும்
உழைச்சுப் படுத்தாத்தான்
பாயில் சுகமான உறக்கம் வரும்
உழைக்காமப் படுத்தா தினம்
வாழ்வில் சீக்குதான் வரும்
உழைச்சாத்தான் நல்ல சோறு வரும்
உறக்கமும் தானா வரும்
உழைச்சு சாப்பிடறதுதான் சொந்தச் சோறு
உழைக்காமச் சாப்பிட்டா அது தர்மச் சோறு
அப்பா உழைச்சு பிள்ளை சாப்பிட்டா-அது பாசச் சோறு
பிள்ளை உழைச்சு அப்பா சாப்பிட்டா அது கடமைச் சோறு
பரம்பரை சொத்தை இருந்து சாப்பிட்டா-அது பங்குச் சோறு
குடும்பம் ஒண்ணா உழச்சு ஒண்ணாச் சாப்பிட்டா-அது
கூட்டுச்சோறு
பிறரை ஏமாற்றிச் சாப்பிட்டா-அது
சாபச் சோறு
இயலாதவனுக்கு சாப்பாடு கொடுத்தா-அது
புண்ணியச் சோறு
ஆசிரியர்: கவிஞர்
பூமுகம் இரா.பெருமாள்