எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி
க+விதை=கருத்தை விதை

Followers

எனது வலைத்தளங்கள்

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Saturday, November 1, 2014

குழந்தைப் பருவம்

குழந்தைப் பருவம்
எந்தக் கவலையும் 
இல்லாத குழந்தைப் பருவம் 
எந்த ஒரு செயலிலும் 
அனுபவம் கண்ட குழந்தைப் பருவம் 
எந்த சூழலையும் எதிர் நோக்காமல் 
நிகழ்காலத்தை மட்டும் நினைக்கும் 
நினைத்த போது தூங்கும் 
விரும்பியதைச் செய்யும் குழந்தைப் பருவம் 
எந்தச் செயலையும் துணிச்சலாக செய்யும் 
துருதுரு வென சுற்றித் திரியும் பருவம் 
கள்ளங்கபடம் இல்லாமல் கட்டில் மேல் இருந்து 
துள்ளிக்குதிக்கும் ஆனந்தப் பருவம் 
எந்தவொரு பொருளுக்கும் 
பிடிவாதம் பிடிக்கும் வெகுளிப் பருவம் 
சேட்டைகள் செய்து மண்டை உடைந்த 
விளையாட்டுப் பருவம் 
கொஞ்சும் மழலைப் பேச்சு மிகுந்தும் 
மிகுந்த மகிழ்ச்சியால் ஆனந்த மழையில் 
கப்பல் விட்டு விளையாடியப் பருவம் 
பள்ளிக்குப் பயந்தப் பருவம் 
மீண்டும் கிடைக்குமா இந்த அரிதானப் பருவம்.

எழுதியவர்:சொ.நே.அன்புமணி











கவிதைக்கான கருத்துகளைப் பார்க்க




No comments: