எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி
க+விதை=கருத்தை விதை

Followers

எனது வலைத்தளங்கள்

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Saturday, November 1, 2014

வாழ்க்கையின் பகுதிகள்


அன்பு எல்லாராலும் 
எல்லாரிடமும் காட்டப்படுவது. 
அறிவு எல்லாரிடமும் இருப்பது 
காதல் ஒருவர் மற்றொருவரிடம் 
மட்டும் காட்டுவது 
நட்பு குறிப்பிட்ட வட்டத்திற்குள் காட்டப்படுவது. 
பாசம் தெரிந்தவர்களிடம் மட்டும் வருவது 
மனித நேயம் தெரியாதவர்களிடமும் வருவது 
கல்வி ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பது 
வேலை ஒரு சிலருக்கு 
மட்டுமே நினைத்தது கிடைப்பது 
பணம் ஒரு சிலரிடம் மட்டுமே அதிகமாய் இருப்பது 
நல்லகுணம் சிலரிடம் மட்டுமே கிடைப்பது 
திறமை எல்லாருக்கும் இருப்பது 
நோய் எல்லோருக்கும் இருப்பது. 
சாத்னை ஒரு சிலரால் நிகழ்த்தப்படுவது. 
வேதனை அனைவருக்கும் இருப்பது. 

அம்மா வாழ்வின் ஆரம்பம் 
அப்பா வாழ்வின் வளர்ச்சி 
நல்ல நண்பர்கள் வாழ்வின் ஊக்கம் 
காதலி நாம் சொல்லாமல் 
நம் பிரச்சனையை புரிந்துகொள்ளும் ஓர் உயிர். 
உறவினர்கள் வாழ்வில் பணம் 
இருந்தால் பக்கத்தில் 
ஆசிரியர்கள் வாழ்வின் ஏணி. 
மனைவி வாழ்வில் நமக்காக வாழும் உயிர் 
குழந்தைகள் நமக்குப்பின் வாழும் உயிர் 
மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை 
அனைத்தையும் கடந்து செல்வதுதான் வாழ்க்கை.

எழுதியவர்:சொ.நே.அன்புமணி











கவிதைக்கான கருத்துகளைப் பார்க்க 

No comments: